Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் (page 10)

Category Archives: அறிவியல்

செவ்வாய் கிரகத்தில் முதலை போன்ற ஊர்வன -புகைப்படம் வெளியீடு –

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 2 ஆண்டுகளுக்கு முன்பு, ‘கியூரியாசிட்டி ரோவர்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. செவ்வாய் கிரகத்தில் உள்ள காட்சிகளை படம் பிடித்து அனுப்புவதற்காக, அந்த விண்கலத்தில், ‘மாஸ்ட்கேம்’ என்ற கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘ரோவர்’ விண்கலம் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் உள்ள காட்சிகளை படம் ... Read More »

புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது: நாசா கண்டுபிடிப்பு

சூரியனுக்கு அருகேயுள்ள கிரகம் புதன். இதனால் இங்கு எப்போதும் கடும் வெப்பம் நிலவுகிறது. அதாவது இதன் மேற்பரப்பில் 430 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலை உள்ளது. இது பூமியில் நிலவும் 58 நாள் வெப்பத்துக்கு ஈடாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் அங்கு தண்ணீர் ஐஸ் ஆக உறைந்த நிலையில் உள்ளது. இதை அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் கண்டுபிடித்துள்ளது. ரேடியோ டெலஸ்கோப் எடுத்து அனுப்பிய போட்டோகளில் இது தெரியவந்துள்ளது. இது ரேடார் கருவி அனுப்பியுள்ள சிக்னல் மூலமும் தெரியவந்துள்ளது. புதன் ... Read More »

எரிமலை சீற்றத்தால் அழியப்போகும் ஜப்பான் – அதிர்ச்சி தகவல்..

ஜப்பானில் உள்ள பயங்கர எரிமலைகளில் சீற்றம் ஏற்பட்டால் அது ஜப்பான் முழுதையும் அழிக்கும் அபாயம் இருப்பதாக புவி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மிகப்பெரிய எரிமலை சீற்றத்தினால் அடுத்த நூற்றாண்டில் ஜப்பான் நாடு முழுதும் அழிந்து விடும் அபாயம் உள்ளது என்றும் 127 மில்லியன் மக்கள் தொகைக்கு பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் புதிய ஆய்வு ஒன்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து கோபே பல்கலைக் கழக புவி விஞ்ஞான ஆய்வுத்துறை பேராசிரியர் யொஷியுகி டட்சுமி கூறும்போது, “மிகப்பெரிய ... Read More »

புளியமரத்தில் லட்சக்கணக்கான பேய் : திகிலூட்டும் திக் திக்.. உண்மை! –

சிறுவயதிலிருந்து பேய் இருக்கிறது என்றால், அது புளியமரத்தின் மீது தான் அமர்ந்திருக்கும் என்று கதை சொல்வார்கள். இரவில் வெளியே விளையாட செல்லும் சிறுவர்களுக்கு, அங்கே பார் புளியமரத்தில் பேய் அமர்ந்திருக்கிறது என்று மிரட்டி வைப்பார்கள். இந்த கதைகளை கேட்டு வளர்ந்த நமக்கு, பெரியவர்கள் ஆகிவிட்ட நிலையிலும், புளியமரத்தை பார்க்கும் போது ஒருவித பயம் வரும். புளியமரத்தில் பேய் இருக்கிறது என்று சொல்வார்கள், ஆனால் ஒரு புளியமரத்தில் லட்சக்கணக்கான பேய் இருக்கிறது என்றால் அது நம்மை ஆச்சரியமூட்டுகிறது. ஆம்,,,இங்கே ... Read More »

சிறுவனின் வயிற்றுக்குள் மண்டையோடு – உயிர் பிழைத்த அதிசயம்..!! –

பிரித்தானியாவை சேர்ந்த 9 வயது சிறுவன் வயிற்றில் பாதுகாக்கப்பட்ட மண்டை ஓட்டினால் உயிர் பிழைத்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவின் சவுத்ஹாம்டனை(Southhampton) சேர்ந்த ஜாஹ்ஃபரி மார்ட்டின்(Jahfari Martin Age-9) என்ற சிறுவன் பைக்கில் சென்றபோது காரில் மோதி விபத்துக்குள்ளானது, இதில் அவரது மண்டை ஓடு பலமான காயமடைந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவனது மூளை வீங்கி இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்த வீக்கம் அவனுக்கு அழுத்தத்தை தந்து உயிரை கொல்லும் என்ற அபாயம் இருந்ததால் மருத்துவர்கள் ... Read More »

நீரின் அடியில் தொடர்புகளை ஏற்படுத்த உதவும் புதிய சாதனம் அறிமுகம்..!

நீர் நிலைகளின் ஆழமான பகுதிகளில் பயணம் செய்யும் சுழியோடிகள், முத்துக்குளிப்போர் போன்றவர்கள் தம்மிடையே தொடர்புகளை ஏற்படுத்த Scuba தொடர்பாடல் முறைமை பயனுள்ளதாக காணப்படுகின்றது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இச்சாதனத்தில் 7 வகையான சென்சார்கள் காணப்படுகின்றன. அவை நீர் நிலையின் ஆழம், அசைவு, வெப்பநிலை, காற்று மட்டம் மற்றும் அமைவிடம் போன்றவற்றினை அறிந்துகொள்ளும். மேலும், இச்சாதனத்தினை 100 மீற்றர் ஆழத்திலும் பயன்படுத்த முடிவதுடன் ஒரே தடைவையில் 70 பேருடன் தொடர்பில் இருக்க முடியும். Read More »

மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்கை மரம்…!

காற்றைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்கை மரமொன்றை பிரான்ஸைச் சேர்ந்த பொறியியலாளர்கள் உருவாக்கியுள்ளனர். மேற்படி மரத்தின் பிளாஸ்டிக்காலான இலைக் கட்டமைப்பில் மறைந்துள்ள காற்றாடிகள் மூலம் மின்சக்தி பிறப்பிக்கப்படுகிறது. இந்த காற்று மரத்தை எதிர்வரும் ஆண்டு சந்தைப் படுத்த அதனை உருவாக்கியுள்ள ஜேரோமி லரிவியரி தலைமையிலான ஆய்வாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதன் விலை 23 500 ஸ்ரேலிங் பவுண் என தெரிவிக்கப்படுகிறது. Read More »

ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் விமானம்

உலகின் எந்த மூலைக்கும் நான்கு மனி நேரத்தில் செல்லக் கூடிய வகையில் ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் நவீன ரக விமானத்தை இங்கிலாந்தை சேர்ந்த ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்து வருகின்றது. தரையில் இருந்து புறப்படும் போது விமானத்தின் வேகத்திலும், புவி ஈர்ப்பு சக்திக்கும் அதிகமான உயரத்தில் பறக்கும் வேளையில் ராக்கெட் வேகத்திலும் சீறிப்பாயும் இந்த விமானத்தை தயாரிக்கும் இரண்டாம்கட்ட முயற்சிகள் வெற்றியடைந்துள்ளன. முந்தைய முயற்சிகளில் ஆயிரம் டிகிரி செல்ஷியஸ் அளவிலான வெப்பத்தை, ... Read More »

இனி உங்கள் கையும் டச் ஸ்க்ரீன் தான்…

சிக்ரெட்(cicret) என்னும் பாரீஸ் நிறுவனம் சமீபத்தில் தன்னுடைய பிரேஸ்லெட்டை அறிமுகப்படுத்தியது. பிரேஸ்லெட் என்றதும் தங்கமா இல்ல பிளாட்டினமா என்று தான் சந்தேகம் வரும். இரண்டும் அல்ல. இது எலக்ட்ரானிக் பிரேஸ்லெட்! ஆம், இந்தப் பிரேஸ்லெட் அணிந்து கொள்வதன் மூலம் உங்கள் கையும் டச் ஸ்க்ரீனாக மாற்றலாம். இந்தப் பிரேஸ்லெட்டை உங்கள் மொபைல் அல்லது டேப்லெட்டுடன் இணைப்பதன் மூலம் உங்கள் கையிலுள்ள இந்தப் பிரேஸ்லெட் மொபைல் மற்றும் டேப்லெட்டின் திரையை ப்ரொஜெக்டர் மூலம் உங்கள் கையில் ப்ரொஜெக்ட் செய்து ... Read More »

தானாக தீப்பற்றி எரியும் அதிசய குழந்தைகள் – பரபரப்பு செய்தி..!!

விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் குழந்தையின் கை கால்களில் தீப்பற்றி எரிவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள நெடி கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன் (38), கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (36). இவர்களுக்கு நர்மதா (3) என்ற மகளும், ராகுல் (2) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பிணியாக இருந்த ராஜேஸ்வரிக்கு, கடந்த வாரம் மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் மாலை தாயுடன் குழந்தை ... Read More »

Scroll To Top